செய்திகள்

தருமபுரியில் சூதாடிய 6 பேர் கைது

Published On 2018-09-01 13:46 GMT   |   Update On 2018-09-01 13:46 GMT
தருமபுரியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பணம் வைத்து சூதாடிய 6 பேரை கைது செய்தனர்.
தருமபுரி:

தருமபுரி சப்-இன்ஸ் பெக்டர் கிருஷ்ணவேணி மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தொவரன்தொட்டி அரச மரத்தடியில் சின்னசாமி (வயது 51), கண்ணன் (29) மற்றும் சத்யா (35) ஆகியோர் பணம் வைத்து சூதாடி கொண்டு இருந்தனர். இதனையறிந்த போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.

மேலும் அவர்கள் வைத்திருந்த ரூ. 25 ஆயிரத்து 290 பணமும், சீட்டு கட்டும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் பொம்மிடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பஸ் நிலையத்துக்கு பின்னால் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (41), ஆறுமுகம் (30) மற்றும் சரவணன் (45) ஆகியோர் சூதாடி கொண்டு இருந்தனர்.

இதனையறிந்த போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். அவர்கள் வைத்திருந்த ரூ. 110 பணம் சீட்டுக்கட்டும் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News