செய்திகள்

பாப்பிரெட்டிப்பட்டி அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

Published On 2018-09-01 13:31 GMT   |   Update On 2018-09-01 13:31 GMT
பாப்பிரெட்டிப்பட்டி அருகே கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தருமபுரி:

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்துள்ள வெங்கடசமுத்திரத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் பழனிவேல் (வயது 38), கூலித்தொழிலாளி. இவர் வீடு கட்ட அதிக கடன் வாங்கி உள்ளார். எனவே குடும்பத்தினர் பழனிவேலுவை கண்டித்து உள்ளனர். இதனால் மன வேதனை அடைந்த இவர் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தார்.

இதனையறிந்த அக்கம் பக்கத்தினர் பழனிவேலுவை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் பழனிவேல் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News