செய்திகள்

தேவதானப்பட்டி அருகே திருமண ஆசை காட்டி இளம்பெண் கடத்தல்

Published On 2018-09-01 11:26 GMT   |   Update On 2018-09-01 11:26 GMT
தேவதானப்பட்டி அருகே திருமண ஆசை காட்டி இளம்பெண்ணை கடத்திய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி:

பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலம் ஏ.வாடிப்பட்டியைச் சேர்ந்த சிவசுப்பிரமணி மகள் ரம்யா என்ற மலர்விழி (வயது 16). 9-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்தார். தேவாரம் அருகே உள்ள தம்மிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த முத்துமணி மகன் சிவரங்கராஜ் (24). கடந்த சில நாட்களாக ஏ.வாடிப்பட்டியில் தங்கி வேலை பார்த்து வந்தார். அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த ரம்யா திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அதே போல் சிவரங்கராஜூம் மாயமாகி இருந்தார். இதனால் சந்தேகமடைந்த ரம்யாவின் தாய் வேல்மணி ஜெயமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரில் தனது மகளை சிவரங்கராஜ்தான் கடத்தி சென்றிருக்க கூடும் என தெரிவித்ததின் பேரில் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News