செய்திகள்

விடுதலை சிறுத்தை ரவிகுமாருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்- முதல்வருக்கு மார்க். கம்யூனிஸ்டு கடிதம்

Published On 2018-08-31 10:14 GMT   |   Update On 2018-08-31 10:14 GMT
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் உயிருக்கு ஆபத்து இருப்பதால் பாதுகாப்பு வழங்க கோரி முதல்வருக்கு மார்க். கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார். #vckravikumar

சென்னை:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

நாடு முழுவதும் மாற்றுக் கருத்துக்கள் தெரிவிக்கும் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், எதிர்கட்சியினர் கடுமையாக அச்சுறுத்தலுக்கு ஆளாகி, படுகொலை செய்யப்பட்டு வருவது தொடர்கதையாக உள்ளது.

இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் உயிருக்கு ஆபத்து இருப்பதாக வந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. இது குறித்து விரிவான விசாரணை நடத்தி அச்சுறுத்தலுக்கு காரணமானவர்களை கண்டறிந்து கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் அசம்பாவிதம் ஏதும் நடந்து விடாமல் தடுத்திட ரவிக்குமாருக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. #vckravikumar

Tags:    

Similar News