செய்திகள்

தமிழக அரசுக்கு எதிராக வழக்குகள் தொடர திமுக ரூ.11 கோடி செலவு

Published On 2018-08-29 07:06 GMT   |   Update On 2018-08-29 07:24 GMT
தமிழக அரசுக்கு எதிராக வழக்குகளை தொடுக்க தி.மு.க. வக்கீல்கள் செலவு மற்றும் கோர்ட்டு வகைக்காக ரூ.11 கோடிவரை செலவழித்துள்ளதாக பொதுக்குழுவில் தாக்கல் செய்யப்பட்ட கணக்கு தணிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #DMK #DMKGeneralMeeting
சென்னை:

தமிழக அரசுக்கு எதிராக தி.மு.க. பல்வேறு வழக்குகளை கோர்ட்டில் தொடர்ந்து இருந்தது.

அமைச்சர், போலீஸ் உயர் அதிகாரிகள் தொடர்புடைய குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க கோரி வழக்கு தொடர்ந்தது.

எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த துணை முதல்-மந்திரி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் 10 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு தொடர்ந்தது. இது தவிர தமிழக அரசுக்கு எதிராக தி.மு.க. பல்வேறு வழக்குகளை கோர்ட்டில் தொடுத்தது.

இந்த நிலையில் தமிழக அரசுக்கு எதிராக வழக்குகளை தொடுக்க தி.மு.க. வக்கீல்கள் செலவு மற்றும் கோர்ட்டு வகைக்காக ரூ.11 கோடிவரை செலவழித்துள்ளது. தி.மு.க. பொதுக்குழுவில் தாக்கல் செய்யப்பட்ட கணக்கு தணிக்கையில் இதுபற்றி தெரிவிக்கப்பட்டுள்ளதாக தி.மு.க. கணக்கு தணிக்கை குழு உறுப்பினர் தெரிவித்தார்.


ஆர்.கே. நகர் தேர்தல் பிரசாரத்துக்கு ரூ.10 லட்சம் செலவழிக்கப்பட்டது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல தி.மு.க.வுக்கு வந்த பணம் விவரம், செலவழித்த மற்ற விவரம் ஆகியவை பற்றியும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஆண்டு தோறும் கணக்கு தணிக்கை தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டு தேர்தல் கமி‌ஷனிடம் அனுப்பப்படும். பின்னர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்படும். #DMK #DMKGeneralMeeting
Tags:    

Similar News