செய்திகள்

மோட்டார்சைக்கிள் மீது மினிலாரி மோதி விவசாயி பலி

Published On 2018-08-27 16:48 GMT   |   Update On 2018-08-27 16:48 GMT
கெலமங்கலம் அருகே மோட்டார்சைக்கிள் மீது மினிலாரி மோதிய விபத்தில் விவசாயி பலியானார்.
ராயக்கோட்டை:

கெலமங்கலம் அருகே உள்ள மாசிநாயக்கனபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா (வயது 42), விவசாயி. இவருடைய மனைவி சாவித்திரி (40). இவர்கள் நேற்று மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

பாரந்தூர் பஸ் நிறுத்தம் அருகில் வந்த போது அந்த வழியாக சென்ற மினிலாரி மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கிருஷ்ணப்பா பரிதாபமாக இறந்தார். சாவித்திரி படுகாயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்த விபத்து தொடர்பாக ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News