செய்திகள்

கலெக்டர் அலுவலகம் நோக்கி அரசு டாக்டர்கள் பேரணி- ஆர்ப்பாட்டம்

Published On 2018-08-25 11:48 GMT   |   Update On 2018-08-25 11:48 GMT
மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து அரசு டாக்டர்கள் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திண்டுக்கல்:

மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து அரசு டாக்டர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கூட்டமைப்பு நிர்வாகி சீனிவாசன் தலைமையில் அரசு டாக்டர்கள் சுரேஷ்பாபு, திருலோகசந்தர், உமாதேவி, செந்தில்குமார், சந்தனகுமார் உள்பட 100-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இருந்து பேரணியாக புறப்பட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து டாக்டர்கள் தெரிவிக்கையில், ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் பல கட்ட போராட்டங்கள் நடத்தி உள்ளோம். அடுத்த கட்டமாக செப்டம்பர் 9-ந் தேதி சென்னை கோட்டையை நோக்கி ஊர்வலம் செல்வது என்றும் அதன்பின்னும் கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்துவது எனவும் தெரிவித்தனர். #tamilnews
Tags:    

Similar News