செய்திகள்

மாணவ-மாணவிகளுக்காக கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை

Published On 2018-08-23 16:03 GMT   |   Update On 2018-08-23 16:03 GMT
பள்ளிக்கு சென்று வரும் மாணவ-மாணவிகளின் வசதிக்காக கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
ராஜபாளையம்:

ராஜபாளையம் அருகே எஸ்.ராமலிங்காபுரத்தில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க தாலுகா மாநாடு சங்க தாலுகா தலைவர் அய்யனார் தலைமையில் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய துணைச்செயலாளர் ஜெயக்குமார் வரவேற்று பேசினார். மாநிலக்குழு ராமசாமி, மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான லிங்கம், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் வரதராஜன் ஆகியோர் மாநாடு குறித்து விளக்கி பேசினர். ஒன்றிய செயலாளர்கள் வீராச்சாமி, முத்துமாரி, கணேச மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

எஸ்.ராமலிங்காபுரத்தில் இருந்து நல்லம நாயக்கர்பட்டிக்கு பள்ளிக்கு சென்று வரும் மாணவ-மாணவிகளின் வசதிக்காக கூடுதல் பஸ் இயக்க வேண்டும், மருத்துவ துணி தயாரிப்பு தொழிலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், சமுசிகாபுரம் முதல் முதுகுடி வரையிலான சாலையை அகலப்படுத்தி இரு வழிச்சாலையாக தரம் உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
Tags:    

Similar News