செய்திகள்

திருவாரூர் அருகே தகராறை தடுக்க முயன்ற முதியவர் மரணம்

Published On 2018-08-23 11:14 GMT   |   Update On 2018-08-23 11:14 GMT
திருவாரூர் அருகே இருவருக்குள் ஏற்பட்ட தகராறை தடுக்க முயன்ற முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர்:

திருவாரூர் அருகே உள்ள காட்டூரை சேர்ந்த ராமையன் என்பவர் மகன் இளையராஜா. (வயது 35). இவருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் ஆசைதம்பி (40) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ள முயன்றனர்.

இதனை கண்ட ராமையன் அவர்களை சமாதானம் செய்ய முயன்றார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதுபற்றி காட்டூர் கிராம நிர்வாக அலுவலர் உமாமகேஸ்வரி திருவாரூர் தாலுக்கா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
Tags:    

Similar News