செய்திகள்
ஆண்டிப்பட்டி அருகே நோய் கொடுமையால் பெண் தற்கொலை
ஆண்டிப்பட்டி அருகே நோய் கொடுமையால் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆண்டிப்பட்டி:
கண்டமனூர் ராஜேந்திராநகர் கிழக்கு தெருவை சேர்ந்த ஜக்கையன் மனைவி செல்வி (வயது40). இவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக செல்விக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்தது. இதனால் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அவரது தந்தை சின்ன சுருளி கொடுத்த புகாரின் பேரில் கண்டமனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.