செய்திகள்

திண்டுக்கல்லில் காதலன் வீட்டு முன்பு வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்த பெண்

Published On 2018-08-20 10:01 GMT   |   Update On 2018-08-20 10:01 GMT
திண்டுக்கல்லில் காதலித்து ஏமாற்றிய வாலிபர் வீட்டு முன்பு வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல்:

திண்டுக்கல்-நத்தம் நம்பிக்கோட்டை பகுதியை சேர்ந்த திருப்பதி மகள் ராஜேஸ்வரி (வயது23). இவர் அதே பகுதியை சேர்ந்த சக்திவடிவேல் (25) என்பவரை கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளார்.

இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாக சென்று வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சக்திவடிவேல் தனது காதலியை பார்ப்பதை தவிர்த்து வந்துள்ளார். அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார்.

ஆனால் அதற்கு அவர் மறுத்ததோடு இனிமேல் தனக்கு போன் செய்ய வேண்டாம் என மிரட்டி உள்ளார்.

இதனால் வேதனை யடைந்த ராஜேஸ்வரி இன்று காலை தனது காதலன் வீட்டுக்கு வந்தார். அவரை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்துள்ளனர். இதனால் தான் கொண்டு வந்த வி‌ஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் இது குறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து ராஜேஸ்வரியை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News