செய்திகள்

வீடு புகுந்து செவிலியரை தாக்கி 5 பவுன் நகை பறிப்பு

Published On 2018-08-19 17:47 GMT   |   Update On 2018-08-19 17:47 GMT
கருமாத்தூரில் வீடு புகுந்து செவிலியரை தாக்கி 5 பவுன் நகையை மர்மநபர்கள் பறித்துச்சென்றுவிட்டனர்.
செக்கானூரணி:

கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரி எதிரில் உள்ள பசும்பொன் நகரில் நேற்று அதிகாலை 3 மர்ம நபர்கள் அரசு செவிலியர் சின்னப்பொண்ணுவின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர்அங்கு தூங்கிக் கொண்டிருந்த அவரை தாக்கிவிட்டு 5 பவுன் நகையை பறித்துச் சென்றுவிட்டனர்.

இதேபோல மூணான்டிபட்டியில் ஊரின் எல்லையில் தனியாக இருந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கு தூங்கிக்கொண்டு இருந்த செல்வமணியை தாக்கி அவர், கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் நகையை பறிக்கமுயன்றனர்.

இதையடுத்து அவர் சத்தம்போட்டதால் அவருடைய மகன் எழுந்து மர்ம நபர்களை பிடிக்க முயன்றுள்ளார். அப்போது அவரை, மர்மநபர்கள் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் செக்கானூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். 
Tags:    

Similar News