செய்திகள்
வீடு புகுந்து செவிலியரை தாக்கி 5 பவுன் நகை பறிப்பு
கருமாத்தூரில் வீடு புகுந்து செவிலியரை தாக்கி 5 பவுன் நகையை மர்மநபர்கள் பறித்துச்சென்றுவிட்டனர்.
செக்கானூரணி:
கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரி எதிரில் உள்ள பசும்பொன் நகரில் நேற்று அதிகாலை 3 மர்ம நபர்கள் அரசு செவிலியர் சின்னப்பொண்ணுவின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர்அங்கு தூங்கிக் கொண்டிருந்த அவரை தாக்கிவிட்டு 5 பவுன் நகையை பறித்துச் சென்றுவிட்டனர்.
இதேபோல மூணான்டிபட்டியில் ஊரின் எல்லையில் தனியாக இருந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கு தூங்கிக்கொண்டு இருந்த செல்வமணியை தாக்கி அவர், கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் நகையை பறிக்கமுயன்றனர்.
இதையடுத்து அவர் சத்தம்போட்டதால் அவருடைய மகன் எழுந்து மர்ம நபர்களை பிடிக்க முயன்றுள்ளார். அப்போது அவரை, மர்மநபர்கள் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் செக்கானூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரி எதிரில் உள்ள பசும்பொன் நகரில் நேற்று அதிகாலை 3 மர்ம நபர்கள் அரசு செவிலியர் சின்னப்பொண்ணுவின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர்அங்கு தூங்கிக் கொண்டிருந்த அவரை தாக்கிவிட்டு 5 பவுன் நகையை பறித்துச் சென்றுவிட்டனர்.
இதேபோல மூணான்டிபட்டியில் ஊரின் எல்லையில் தனியாக இருந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கு தூங்கிக்கொண்டு இருந்த செல்வமணியை தாக்கி அவர், கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் நகையை பறிக்கமுயன்றனர்.
இதையடுத்து அவர் சத்தம்போட்டதால் அவருடைய மகன் எழுந்து மர்ம நபர்களை பிடிக்க முயன்றுள்ளார். அப்போது அவரை, மர்மநபர்கள் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் செக்கானூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.