செய்திகள்
திண்டிவனம் அருகே செல்லியம்மன் கோவிலில் 2 விளக்குகள் திருட்டு
திண்டிவனம் அருகே செல்லியம்மன் கோவிலில் இருந்த 4½ அடி உயரமுள்ள 2 பித்தளை விளக்குகளை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.
திண்டிவனம்:
திண்டிவனம் அருகே மணம்பூண்டியில் செல்லியம்மன் கோவில் உள்ளது. இதில் பூசாரியாக அதே கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவர் உள்ளார். நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்ததும் கோவிலை பூட்டிவிட்டு ஏழுமலை வீட்டுக்கு சென்றார்.
நேற்று காலையில் வந்து பார்த்தபோது கோவிலின் முன்பக்க கதவு பூட்டு உடைந்து கிடந்தது. கோவிலில் இருந்த 4½ அடி உயரமுள்ள 2 பித்தளை விளக்குகளை காணவில்லை. அதனை மர்மநபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
திண்டிவனம் அருகே மணம்பூண்டியில் செல்லியம்மன் கோவில் உள்ளது. இதில் பூசாரியாக அதே கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவர் உள்ளார். நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்ததும் கோவிலை பூட்டிவிட்டு ஏழுமலை வீட்டுக்கு சென்றார்.
நேற்று காலையில் வந்து பார்த்தபோது கோவிலின் முன்பக்க கதவு பூட்டு உடைந்து கிடந்தது. கோவிலில் இருந்த 4½ அடி உயரமுள்ள 2 பித்தளை விளக்குகளை காணவில்லை. அதனை மர்மநபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.