செய்திகள்
பாலக்கோடு அருகே சரக்கு வேன் - மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: டீ மாஸ்டர் பரிதாப உயிரிழப்பு
பாலக்கோடு அருகே சரக்கு வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் டீ மாஸ்டர் பரிதாபமாக பலியானார்.
பாலக்கோடு:
பாலக்கோடு அருகே உள்ள பனங்காடு பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 35), டீ மாஸ்டர். இவர் நேற்று தர்மபுரியில் இருந்து பாலக்கோடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது சோமனஅள்ளியில் காட்டம்பட்டி பிரிவு ரோட்டில் அந்த வழியாக வந்த சரக்குவேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் முருகன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இந்த விபத்து குறித்து பாலக்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு ஆ ஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலக்கோடு அருகே உள்ள பனங்காடு பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 35), டீ மாஸ்டர். இவர் நேற்று தர்மபுரியில் இருந்து பாலக்கோடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது சோமனஅள்ளியில் காட்டம்பட்டி பிரிவு ரோட்டில் அந்த வழியாக வந்த சரக்குவேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் முருகன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இந்த விபத்து குறித்து பாலக்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு ஆ ஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.