செய்திகள்

தஞ்சை அரசு மருத்துவமனையில் தகராறில் ஈடுபட்ட 2 பேர் கைது

Published On 2018-08-18 12:11 GMT   |   Update On 2018-08-18 12:11 GMT
தஞ்சை அரசு மருத்துவமனையில் தகராறில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர்:

தஞ்சை மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கவிதா (வயது 37). இவர் கடந்த 14-ந் தேதி உடல் நலக்குறைவு காரணமாக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இந்நிலையில் அவர் சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையிலேயே இறந்தார். இதனால் அதிருப்தி அடைந்த அவரது உறவினர்கள் டாக்டர்கள் கவனக்குறைவே கவிதா இறப்பிற்கு காரணம் என்று கூறி  தகராறு செய்து கவிதா அனுமதிக்கப்பட்டிருந்த வார்டை சேதப்படுத்தினர். 

இதனை கண்டித்து 15-ந் தேதி தஞ்சை மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடத்தினர். இதைதொடர்ந்து தஞ்சை மருத்துவக் கல்லூரி போலீசார் அங்கு தகராறில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குபதிவு செய்து தேடி வந்தனர்.

இந்நிலையில் கவிதாவின் உறவினர்களான தஞ்சை கீழவாசல் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன்களான ஜெயக்குமார் , சிவகுமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர். 
Tags:    

Similar News