செய்திகள்
தூத்துக்குடியில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் மத்திய அரசின் ரபேல் விமான ஊழலைக் கண்டித்து வி.வி.டி. சிக்னல் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் மத்திய அரசின் ரபேல் விமான ஊழலைக் கண்டித்து வி.வி.டி. சிக்னல் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் நடேஷ் குமார் தலைமை வகித்தார். ஐ.என்.டி.யு.சி. மாவட்ட தலைவர் ராஜ், தெற்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார், முன்னாள் மாநகர மாவட்ட தலைவர் ஏ.டி.எஸ். அருள், நிர்வாகிகள் செல்வராஜ், மைதீன், காமராஜ், சுப்பிரமணியன், ஆரோக்கியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் ஏ.பி.சி.சண்முகம் கலந்து கொண்டு துவக்கவுரையாற்றினார். இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டேனியல் ராஜ், வக்கீல் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.