செய்திகள்

வாஜ்பாய் மறைவையொட்டி தமிழகத்தில் நாளை பொதுவிடுமுறை - அரசு அறிவிப்பு

Published On 2018-08-16 15:00 GMT   |   Update On 2018-08-16 15:00 GMT
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை என அரசு அறிவித்துள்ளது. #AtalBihariVajpayee #RIPVajpayee
சென்னை:

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை அவ்வப்போது, பிரதமர் மோடி, மூத்த மந்திரிகள் நேரில் சென்று விசாரித்து வந்தனர்.

வாஜ்பாய் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், சிகிச்சை பலன் இன்றி அவர் மரணமடைந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்தது. இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து, வாஜ்பாய் மறைவுக்கு 1 வாரம் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து இருந்தது.

மேலும், டெல்லி, பஞ்சாப், புதுச்சேரி புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களும் அவரது மறைவை ஒட்டி, அரசு விடுமுறையை அறிவித்தன. இந்நிலையில் இதேபோல், தமிழகத்தில் நாளை பொதுவிடுமுறை எனவும், அவரது மறைவுக்காக 1 வாரம் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.  #AtalBihariVajpayee #RIPVajpayee
Tags:    

Similar News