செய்திகள்

அய்யலூர் அருகே காட்டுக்குள் பிணமாக தொங்கிய வாலிபர்

Published On 2018-08-16 11:33 GMT   |   Update On 2018-08-16 11:33 GMT
அய்யலூர் அருகே காட்டுக்குள் வாலிபர் பிணமாக தொங்கியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வடமதுரை:

அய்யலூர் குமரம்பட்டி தொங்கும்பாலம் அருகே வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மலைப்பகுதியில் வாலிபர் ஒருவர் மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவ்வழியே சென்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து வனத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் விரைந்து வந்து வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணையில் இந்த நபர் குமரம்பட்டியை சேர்ந்த முருகன்(32) தென்னை மரம் ஏறும்தொழிலாளி என்பது தெரிய வந்ததுள்ளது. மரத்தில் முருகன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு யாரும் இவரை கொன்று மலைப்பகுதியில் தொங்கவிட்டு சென்றனரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News