செய்திகள்

கொடைரோடு அருகே பைக் மீது வேன் மோதல் - வாலிபர் பலி

Published On 2018-08-16 10:50 GMT   |   Update On 2018-08-16 10:50 GMT
கொடை அருகே இன்று மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் வாலிபர் பலியானார்.
கொடைரோடு:

கொடை அருகே உள்ள அம்மாபட்டியைச் சேர்ந்தவர் அமலஜெயசீலன் (வயது 32). இவர் பள்ளப்பட்டியில் உள்ள சிப்காட் தொழிற்சாலையில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இன்று காலை வேலைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார்.

சிப்காட் வளாகத்தில் திரும்பும் போது எதிரே தொழிலாளர்களை ஏற்றி வரும் வேன் அவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அமல ஜெயசீலன் உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் அம்மைய நாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதேஷ் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியான அவருக்கு அனிதா மேரி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
Tags:    

Similar News