செய்திகள்

தென்காசி அருகே கிராமத்துக்குள் வெள்ளம் புகுந்தது - பொதுமக்கள் வெளியேற்றம்

Published On 2018-08-16 09:48 GMT   |   Update On 2018-08-16 09:48 GMT
அடவிநயினார் அணை நிரம்பியதால் அணைக்கு வரும் தண்ணீரை ஆற்றில் திறந்துவிட்டதையடுத்து ஊருக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
தென்காசி:

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த மழை காரணமாக அடவிநயினார் அணை நிரம்பியது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடையநல்லூர் அருகேயுள்ள திருவெட்டியூர் கிராமத்துக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

செங்கோட்டை அருகே உள்ள புளியரை, கட்டளை குடியிருப்பு உள்ளிட்ட பகுதியில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் தெற்கு மேடு பகுதியில் சாத்தான் பத்துகுளம் உடைந்ததால் தண்ணீர் அங்குள்ள வயல்வெளிகளை சூழ்ந்தது.
Tags:    

Similar News