செய்திகள்
மவுன ஊர்வலத்தில் பங்கேற்ற தி.மு.க. பெண் நிர்வாகி மரணம்
கருணாநிதி மறைவையொட்டி இரங்கல் தெரிவிக்கும் மவுன ஊர்வலத்தில் பங்கேற்ற தி.மு.க. பெண் நிர்வாகி மயக்கம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
தருமபுரி:
தர்மபுரியை அடுத்த நல்லம்பள்ளி காலனி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மனைவி ஜானகி (வயது45) தி.மு.க. மகளிர் அணி நிர்வாகியான இவர் கடந்த 8-ந்தேதி தி.மு.க. தலைவர் கருணரிதி மறைவையொட்டி நல்லம்பள்ளியில் நடைபெற்ற இரங்கல் ஊர்வலத்தில் கலந்து கொண்டார். பின்னர் கருணாநிதி உடல் அடக்கம் செய்ய மெரீனாவில் இடம் ஒதுக்காததை கண்டித்து நடந்த மறியலிலும் பங்கேற்றார். அப்போது ஜானகி திடீரென மயங்கி விழுந்தார்.
இதையடுத்து அவர் சிகிச்சைக்காக தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஜானகி உயிரிழந்தார். அவருடைய குடும்பத்தினருக்கு நல்லம்பள்ளி ஒன்றிய தி.மு.க. செயலாளர் சண்முகம் மற்றும் தி.மு.க.வினர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
தர்மபுரியை அடுத்த நல்லம்பள்ளி காலனி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மனைவி ஜானகி (வயது45) தி.மு.க. மகளிர் அணி நிர்வாகியான இவர் கடந்த 8-ந்தேதி தி.மு.க. தலைவர் கருணரிதி மறைவையொட்டி நல்லம்பள்ளியில் நடைபெற்ற இரங்கல் ஊர்வலத்தில் கலந்து கொண்டார். பின்னர் கருணாநிதி உடல் அடக்கம் செய்ய மெரீனாவில் இடம் ஒதுக்காததை கண்டித்து நடந்த மறியலிலும் பங்கேற்றார். அப்போது ஜானகி திடீரென மயங்கி விழுந்தார்.
இதையடுத்து அவர் சிகிச்சைக்காக தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஜானகி உயிரிழந்தார். அவருடைய குடும்பத்தினருக்கு நல்லம்பள்ளி ஒன்றிய தி.மு.க. செயலாளர் சண்முகம் மற்றும் தி.மு.க.வினர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.