செய்திகள்
ஸ்ரீரங்கத்தில் மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை
திருச்சி ஸ்ரீரங்கம் காவிரி ஆற்று பகுதியில் சுமார் 60 வயது பெண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
திருச்சி:
திருச்சி ஸ்ரீரங்கம் காவிரி ஆற்று பகுதியில் சுமார் 60 வயது பெண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இது குறித்து அறிந்த திம்மராயசமுத்திர கிராம நிர்வாக அலுவலர் அனுபிரியா அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். அங்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.
இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், இறந்தவர் மதுரையை சேர்ந்த ராமசாமி மனைவி காமாட்சி (வயது 60) என்பதும், விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்ததும் தெரியவந்தது. அவர் எப்படி திருச்சிக்கு வந்தார்? இங்கு வந்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.