செய்திகள்

குடவாசல் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் மாயம்

Published On 2018-08-14 12:39 GMT   |   Update On 2018-08-14 12:39 GMT
குடவாசல் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் மாயமானது குறித்து தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.
திருவாரூர்:

குடவாசல் அருகே உள்ள நாரணமங்கலத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகள் ஸ்ரீவித்யா (வயது 24). பி.ஏ. பட்டதாரி. இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு வருகிற 23-ந்தேதி திருமணம் நடைபெற இருந்தது. இந்த நிலையில் கடந்த 11-ந்தேதி கும்பகோணம் செல்வதாக கூறிச்சென்ற ஸ்ரீவித்யா மாயமாகி விட்டார்.

அவரை பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்ரீவித்யாவின் தாய் பழனியம்மாள், இது பற்றி குடவாசல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சந்தானமேரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News