செய்திகள்
வடமதுரை அருகே பைக்கில் சென்றவரிடம் நகை பறிப்பு
வடமதுரை அருகே மோட்டார் சைக்கிளில் சென்றவரிடம் நகை பறித்த ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
வடமதுரை:
திண்டுக்கல் ஒய்.எம்.ஆர். பட்டி ஜோசப் காலனி பகுதியை சேர்ந்தவர் இருதயராஜ் (வயது66). இவர் தனது மோட்டார் சைக்கிளில் வடமதுரை அருகே கஸ்தூரிநாயக்கன் பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஒரு வாலிபர் அவரிடம் தீப்பெட்டி கேட்டுள்ளார். அவர் பாக்கெட்டில் இருந்து எடுக்கும்போது கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்துக்கொண்டு ஓடினார். இருதயராஜ் பைக்கில் துரத்தி சென்றும் அவரை பிடிக்க முடியவில்லை.
இது குறித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சூரியதிலகராணி வழக்குப்பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகிறார்.