செய்திகள்

தொட்டம்பட்டி ரெயில் நிலையம் அருகே ரெயில் மோதி முதியவர் பலி

Published On 2018-08-12 15:53 GMT   |   Update On 2018-08-12 15:53 GMT
தர்மபுரி மாவட்டம் தொட்டம்பட்டி ரெயில் நிலையம் அருகே ரெயில் தண்டவாளத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ரெயில் மோதி பலியானார்.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் தொட்டம்பட்டி ரெயில் நிலையம் அருகே ரெயில் தண்டவாளத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் இறந்த முதியவரின் உடலை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் காவி நிற வேட்டி, சட்டை அணிந்திருந்தார். அவருடைய உடலில் காயங்கள் இருந்தன.

இதனால் அவர் ரெயில் மோதி இறந்தது தெரியவந்தது. ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரங்கள் உடனடியாக தெரியவரவில்லை. இதுதொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
Tags:    

Similar News