செய்திகள்

மலையாளப்பட்டி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

Published On 2018-08-12 15:21 GMT   |   Update On 2018-08-12 15:21 GMT
மலையாளப்பட்டி பகுதியில் நாளை பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9 மணி முதல் பணிகள் முடியும் வரை வினியோகம் இருக்காது.
வேப்பந்தட்டை:

அ.மேட்டூர் துணை மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அ.மேட்டூர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், மலையாளப்பட்டி, கொட்டாரக்குன்று, பூமிதானம், கோரையாறு, கவுண்டர்பாளையம், அ.மேட்டூர், அரும்பாவூர், பூலாம்பாடி, பெரியசாமி கோவில், மேலக்குணங்குடி, வேப்படி, பாலக்காடு, சீனிவாசபுரம், கள்ளப்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சார வினியோகம் இருக்காது. 

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News