செய்திகள்
திருப்பூரில் பஸ் டயர் வெடித்து மரத்தில் மோதியது- 5 பயணிகள் படுகாயம்
திருப்பூரில் இன்று காலை பஸ் டயர் வெடித்து மரத்தில் மோதியது. இதில் 5 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
திருப்பூர்:
திருப்பூரில் இருந்து இன்று காலை திருச்சிக்கு அரசு பஸ் பயணிகளுடன் புறப்பட்டது. பஸ் விஜயாபுரம் என்ற இடத்தில் சென்றபோது திடீரென பஸ்சின் முன் பக்க டயர் வெடித்தது. இதில் பஸ் நிலைதடுமாறி தாறுமாறாக ஓடியது. பயணிகள் அலறி சத்தம்போட்டனர்.
பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது. இதில் 5 பயணிகள் படுகாயம் அடைந்தனர். பஸ்சின் முன் பக்க இருக்கையில் அமர்ந்திருந்த கண்டக்டர் தூக்கி வீசியதில் முன் பக்க கண்ணாடியை உடைத்து வெளியே வீசப்பட்டார். படுகாயம் அடைந்த பயணிகள் அனைவரும் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.