செய்திகள்

திருவண்ணாமலையில் தாசில்தார் வீட்டில் நகை, லேப்-டாப் திருட்டு

Published On 2018-08-05 11:53 GMT   |   Update On 2018-08-05 11:53 GMT
திருவண்ணாமலையில் தாசில்தார் வீட்டில் நகை, லேப்-டாப் திருடிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை ராமலிங்கனார் தெருவை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவர் திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக பணியாற்றி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு இவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் மாடியில் உள்ள அறைக்கு சென்று லேப்டாப் மற்றும் 1½ பவுன் நகையை திருடிச் சென்று விட்டனர்.

நேற்று காலை எழுந்து பார்த்தபோது லேப்டாப் மற்றும் நகை திருடப்பட்டிருந்தது குறித்து அறிந்த தாசில்தார் ரமேஷ்குமார் அது குறித்து திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News