செய்திகள்

கரூர் அருகே கள் விற்பனை செய்தவர் கைது

Published On 2018-08-01 11:01 GMT   |   Update On 2018-08-01 11:01 GMT
கரூர் அருகே கள் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #arrestcase

வேலாயுதம்பாளையம்:

கரூர் மாவட்டம், மூலிமங்கலம், மெயின் பஜார் தெருவைச் சேர்ந்தவர் சந்திர சேகரன் (38). இவருக்கு சொந்தமான தோட்டத்தில் தென்னை மரங்கள் பயிரிட்டுள்ளார்.

தென்னை மரத்தில் கள் இறக்கி விற்பனை செய்து வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீஸ்சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது அங்கு சந்திரசேகரன் கள் விற்பனை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது. உடனே போலீசார் சந்திரசேகரனை கைது செய்தனர்.

Tags:    

Similar News