செய்திகள்

ஆறு- வாய்க்கால்களை தூர்வார அனுமதிக்க வேண்டும்- கலெக்டரிடம் விவசாயிகள் வலியுறுத்தல்

Published On 2018-07-30 09:51 GMT   |   Update On 2018-07-30 09:51 GMT
100 நாள் வேலை திட்டத்தில் ஆறு, வாய்க்கால்களை தூர்வார அனுமதிக்க வேண்டும் என கலெக்டரிடம் விவசாயிகள் மனு அளித்துள்ளனர்.
தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று காலை நடந்தது. இதில் கலெக்டர் அண்ணாதுரை கலந்து கொண்டு பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

இந்த நிலையில் தமிழக விவசாயிகள் கூட்டியக்க மாநில துணை தலைவர் கக்கரை சுகுமாரன் தலைமையில் நிர்வாகிகள் கலெக்டர் அண்ணாதுரையை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

டெல்டா மாவட்ட பாசனத்துக்காக கல்லணையில் இருந்து கடந்த 22-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது மாவட்டத்தில் பெரும்பாலான ஆறுகள், வாய்க்கால்கள் தூர்வாரப்படவில்லை.

இதனால் 100 நாள் வேலை திட்டத்தில் ஆறு, வாய்க்கால்களை தூர்வார கோரி பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் முறையிட்டோம். ஆனால் இதற்கு அனுமதியில்லை என்று தெரிவித்துள்ளனர்.

எனவே 100 நாள் வேலை திட்டத்தில் ஆறு- வாய்க்கால்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் மனுவில் தெரிவித்துள்ளனர். #tamilnews
Tags:    

Similar News