செய்திகள்
திருவாரூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய சரக்கு வேன் பறிமுதல்
திருவாரூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய சரக்கு வேனை பறிமுதல் செய்த போலீசார் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
திருவாரூர்:
திருவாரூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசிரேகா தலைமையில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராதாநஞ்சை பகுதியில் உள்ள ஆற்றில் இருந்து அனுமதியின்றி மணல் எடுப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அனுமதியின்றி சரக்கு வேனில் மணல் அள்ளியது தெரியவந்தது.
இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் சரக்கு வேன் டிரைவர் ராதா நஞ்சை பகுதியை சேர்ந்த சங்கர் மகன் பிரவீன்ராஜ் (வயது 19) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து மணல் ஏற்றிய சரக்கு வேனை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து உதவி கலெக்டர் விசாரணை அனுப்பி வைத்தனர்.
திருவாரூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசிரேகா தலைமையில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராதாநஞ்சை பகுதியில் உள்ள ஆற்றில் இருந்து அனுமதியின்றி மணல் எடுப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அனுமதியின்றி சரக்கு வேனில் மணல் அள்ளியது தெரியவந்தது.
இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் சரக்கு வேன் டிரைவர் ராதா நஞ்சை பகுதியை சேர்ந்த சங்கர் மகன் பிரவீன்ராஜ் (வயது 19) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து மணல் ஏற்றிய சரக்கு வேனை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து உதவி கலெக்டர் விசாரணை அனுப்பி வைத்தனர்.