கரிவலம்வந்தநல்லூரில் ஆட்டோ உரிமையாளருக்கு கொலை மிரட்டல்: டிரைவர் கைது
சங்கரன்கோவில்:
கரிவலம்வந்தநல்லூர் பச்சேரியை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். பகல் நேரத்தில் இவர் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இரவு நேரத்தில் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த அய்யனார் மகன் மகாலிங்கம் (20) என்பவர் எடுத்து ஓட்டி வந்துள்ளார். மகாலிங்கம் இரவு நேரங்களில் குடித்து விட்டு ஆட்டோ ஸ்டாண்டில் அடிக்கடி தகராறு செய்துள்ளார்.
இது குறித்து மற்ற ஆட்டோ டிரைவர்கள் வேல்முருகனிடம் தெரிவித்து உள்ளனர். இது பற்றி வேல்முருகன் அய்யனாரை எச்சரித்தும் அவர் திருந்தவில்லை. இதனால் வேதனை அடைந்த வேல்முருகன் இனிமேல் ஆட்டோவை மகாலிங்கம் ஓட்ட வேண்டாம் என சொல்லியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகாலிங்கம் வேல்முருகனை அவதூறாக பேசி கொலைமிரட்டல் விடுத்தாராம்.
இது குறித்து புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கரிவலம்வந்தநல்லூர் போலீசார் மகாலிங்கத்தை கைது செய்தனர்.