செய்திகள்
கோவையில் உதவி பேராசிரியர் விஷம் குடித்து தற்கொலை
கோவையில் உதவி பேராசிரியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.
கோவை:
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 42). இவருக்கு திருமணமாகவில்லை. இவர் கோவை வரதராஜபுரம் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்து, சூலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவருடைய தந்தை, தாய் கடந்த ஆண்டு இறந்துவிட்டனர்.
இந்தநிலையில் இவர் தங்கி இருந்த அறையில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதன் பேரில் போலீசார் விடுதிக்கு விரைந்து சென்று அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அங்கு விஜயகுமார் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் கூறும்போது, வரதராஜபுரம் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்த உதவி பேராசிரியர் விஜயகுமார் கடந்த 3 நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார்.
இவர் தந்தை மற்றும் தாய் இறந்து விட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 42). இவருக்கு திருமணமாகவில்லை. இவர் கோவை வரதராஜபுரம் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்து, சூலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவருடைய தந்தை, தாய் கடந்த ஆண்டு இறந்துவிட்டனர்.
இந்தநிலையில் இவர் தங்கி இருந்த அறையில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதன் பேரில் போலீசார் விடுதிக்கு விரைந்து சென்று அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அங்கு விஜயகுமார் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் கூறும்போது, வரதராஜபுரம் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்த உதவி பேராசிரியர் விஜயகுமார் கடந்த 3 நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார்.
இவர் தந்தை மற்றும் தாய் இறந்து விட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.