செய்திகள்

பாலியல் பலாத்கார வழக்கில் 22 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது

Published On 2018-07-21 17:15 GMT   |   Update On 2018-07-21 17:15 GMT
1996-ம் ஆண்டு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 22 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
அழகியபாண்டியபுரம்:

கீரிப்பாறை பகுதியை சேர்ந்தவர் ராஜா என்கிற ராஜேந்திரன் (வயது40). இவர் 1996-ம் ஆண்டு ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கீரிப்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை தேடி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்ததும் அவர் கடந்த 22 ஆண்டுகளாக தலைமறைவாக வாழ்ந்து வந்தார்.

இந்தநிலையில் ராஜேந்திரன் திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே, இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ மற்றும் போலீசார் லால்குடிக்கு சென்று ராஜேந்திரனை கைது செய்து கீரிப்பாறை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து பூதப்பாண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 
Tags:    

Similar News