செய்திகள்
சென்னைக்கு வந்த விமானத்தில் திடீர் எந்திர கோளாறு
மும்பையில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் எந்திர கோளாறு ஏற்பட்டது. இதில் பயணம் செய்த 117 பயணிகள் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர்.
ஆலந்தூர்:
மும்பையில் இருந்து சென்னைக்கு இன்று காலை விமானம் ஒன்று வந்து கொண்டிருந்தது. தரை இறங்கும் போது விமானத்தில் எந்திர கோளாறு இருப்பதை விமானி கண்டுபிடித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
ஓடுபாதையில் விமானம் தரையிறங்கி சிறிது தூரத்தில் நின்று விட்டது. இழுவை வாகனம் மூலம் விமானத்தை இழுத்து செல்லப்பட்டது. பின்னர் 117 பயணிகள் பத்திரமாக கீழே இறக்கப்பட்டனர். #ChennaiAirport
மும்பையில் இருந்து சென்னைக்கு இன்று காலை விமானம் ஒன்று வந்து கொண்டிருந்தது. தரை இறங்கும் போது விமானத்தில் எந்திர கோளாறு இருப்பதை விமானி கண்டுபிடித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
ஓடுபாதையில் விமானம் தரையிறங்கி சிறிது தூரத்தில் நின்று விட்டது. இழுவை வாகனம் மூலம் விமானத்தை இழுத்து செல்லப்பட்டது. பின்னர் 117 பயணிகள் பத்திரமாக கீழே இறக்கப்பட்டனர். #ChennaiAirport