செய்திகள்
ஆலங்குளத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்
ஆலங்குளத்தில் அரிமா சங்கம்,மெர்கண்டைல் வங்கி சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
ஆலங்குளம்
ஆலங்குளத்தில் அரிமா சங்கம்,மெர்கண்டைல் வங்கி சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. அரசு மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்ற இந்த முகாமிற்கு மெர்கண்டைல் வங்கி மேலாளர் கணேஷ் பாபு தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். அரிமா சங்க தலைவர் ஜெயராஜ் முன்னிலை வகித்தார்.
செயலாளர் பாலசுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்றார். முகாமில் 130 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதில் 44 நபர்களுக்கு கண்புறை அறுவை சிகிச்சை செய்து கொள்ள டாக்டர்கள் பரிந்துரைத்தனர். இந்த நிகழ்சியில் அரிமா சங்கத்தை சேர்ந்த உதயராஜ், பாலகிருஷ்ணன், அய்யங்கண்னு, ஜஸ்டின் ராஜ் திரவியம், ராஜகொளுந்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.