குடவாசலில் கணவன் - மனைவியை தாக்கிய 2 பேர் கைது
திருவாரூர்:
குடவாசல் அருகே தலையாழம் காடு பகுதியைச் சேர்ந்தவர் குமார் (வயது 35). இவரது மனைவி மீனாகுமாரி.
அதே பகுதியைச் சேர்ந்தவர் டேவிட்ராஜ். இவருக்கு சொந்தமாக தென்னந் தோப்பு உள்ளது. டேவிட்ராஜ் தென்னந் தோப்புக்கு குமார் வீட்டின் முன் பக்க வழியாக தான் செல்ல வேண்டும்.
இந்தநிலையில் டேவிட் ராஜ் தென்னந் தோப்பில் பொருட்கள் ஏற்ற லாரி சென்றது. அப்போது குமார் வீட்டின் தரைதளத்தில் ஏரி சென்றதால் தரைதளம் சேதம் அடைந்தது. இதில் ஆத்திரம் அடைந்த குமார் அவரது மனைவி மீனாகுமாரி ஆகியோர் லாரி டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். அப்போது அங்கு வந்த டேவிட் ராஜ் மற்றும் அவரது மகன்கள் ஜான்பாண்டியன், ஜான் பிரிட்டோ ஆகியோர் குமார் மற்றும் மீனா குமாரியை தாக்கினர்.
இதுகுறித்து குமார் குடவாசல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து டேவிட்ராஜ், ஜான் பாண்டியன் ஆகியோரை கைது செய்தனர். தப்பி சென்ற ஜான்பிரிட்டோவை தேடி வருகின்றனர்.