செய்திகள்

விருதுநகரில் தொழிலாளி வீட்டில் 7 பவுன் நகை திருட்டு

Published On 2018-07-09 10:01 GMT   |   Update On 2018-07-09 10:01 GMT
விருதுநகரில் தொழிலாளி வீட்டின் பீரோவில் இருந்த 7 பவுன் நகையை யாரோ திருடிச் சென்று விட்டனர்.

விருதுநகர்:

விருதுநகர் குருமூர்த்தி நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ராமர். இவருடைய மனைவி காந்திமதி (வயது 37). இருவரும் தீப்பெட்டி ஆலையில் வேலை பார்த்து வருகின்றனர்.

வேலைக்கு செல்லும் போது வீட்டை பூட்டி, சாவியை குளியல் அறை அருகே மறைவான இடத்தில் வைத்துச் செல்வார்களாம். நேற்று வேலை முடிந்து கணவன்-மனைவி வீடு திரும்பினர்.

பின்னர் காந்திமதி பீரோவை திறந்தபோது அங்கு வைக்கப்பட்டு இருந்த 7 பவுன் தங்கச்சங்கிலி காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் யாரோ மர்ம நபர் வீடு புகுந்து திருடியிருப்பது தெரியவந்தது.

இது குறித்து ஆமத்தூர் போலீசில் காந்திமதி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காந்திமதி தம்பதி வீட்டு சாவியை மறைவான இடத்தில் வைப்பதை யாரோ நோட்டமிட்டு வீடு புகுந்து நகையை திருடிச் சென்று இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

Tags:    

Similar News