செய்திகள்

போலீசாரை தள்ளிவிட்டு புழல் ஜெயில் வாசலில் கைதி தப்பி ஓட்டம்

Published On 2018-06-24 17:42 GMT   |   Update On 2018-06-24 17:42 GMT
புழல் ஜெயில் வாசலில் போலீசாரை தள்ளிவிட்டு கைதி தப்பி ஓடியது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கைதியை தேடி வருகிறார்.
செங்குன்றம்:

சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 27), கூலி வேலை செய்து வருகிறார்.

ஆதம்பாக்கம் பகுதியில் நடந்த அடிதடி தகராறு தொடர்பாக கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை புழல் ஜெயிலில் அடைக்க அனுப்பி வைத்தனர்.

போலீஸ் ஏட்டுகள் 2 பேர் கார்த்திக்கை ஆட்டோவில் ஏற்றி புழல் ஜெயிலுக்கு கொண்டு சென்றனர். இரவு 8.30 மணி அளவில் ஆட்டோ புழல் ஜெயில் வாசலை சென்றடைந்தது.

அப்போது ஆட்டோவில் இருந்து இறங்கிய கார்த்திக் போலீஸ் ஏட்டுகள் இருவரையும் தள்ளிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் நடராஜ் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கைதியை தேடி வருகிறார்.

Tags:    

Similar News