செய்திகள்
மன்னார்குடியில் மின்வாரிய ஊழியர் மீது பெண் பாலியல் புகார்
மன்னார்குடியில் மின்வாரிய ஊழியர் மீது பெண் பாலியல் புகார் அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மன்னார்குடி:
மன்னார்குடி பகுதி மதுக்கூர் ரோடு 6-ம் நம்பர் வாய்க்கால் தெருவில் வசிப்பவர் முகமதுஅஜீஸ். இவரது மனைவி ஆயிசாசித்திகா(வயது22). இவர் நேற்று மதியம் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது மன்னார்குடி மின்வாரியத்தில் கணக்கீட்டாளராக உள்ள ஜெயராமன் என்பவர் இவர் வீட்டிற்கு மின்அளவீடு கணக்கெடுக்க வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது இவர் வீட்டில் தனியாக இருந்த ஆயிசாசித்திகாவிடம் தவறாக நடக்க முயன்றாராம். இதுகுறித்து ஆயிசாசித்திகா மன்னார்குடி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
மன்னார்குடி பகுதி மதுக்கூர் ரோடு 6-ம் நம்பர் வாய்க்கால் தெருவில் வசிப்பவர் முகமதுஅஜீஸ். இவரது மனைவி ஆயிசாசித்திகா(வயது22). இவர் நேற்று மதியம் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது மன்னார்குடி மின்வாரியத்தில் கணக்கீட்டாளராக உள்ள ஜெயராமன் என்பவர் இவர் வீட்டிற்கு மின்அளவீடு கணக்கெடுக்க வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது இவர் வீட்டில் தனியாக இருந்த ஆயிசாசித்திகாவிடம் தவறாக நடக்க முயன்றாராம். இதுகுறித்து ஆயிசாசித்திகா மன்னார்குடி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews