செய்திகள்

முதுகுளத்தூரில் கனமழை - விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2018-06-20 08:58 GMT   |   Update On 2018-06-20 08:59 GMT
முதுகுளத்தூரில் நேற்று மாலை தொடர்ந்து பெய்த மழையால் பருத்தி போன்ற சிறு தானிய வகைகளை விவசாயம் செய்து வரும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

முதுகுளத்தூர்:

முதுகுளத்தூரில் நேற்று மாலை தொடர்ந்து பெய்த மழையால் பருத்தி போன்ற சிறு தானிய வகைகளை விவசாயம் செய்து வரும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சில வாரங்களாக அவ்வப்போது மழை பெய்து வந்தபோதிலும், வெப்ப சலன காற்று பலமாக வீசி வருகிறது. இதனால் கடுமையான வெயிலால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு இருந்த போது, நேற்று மாலை பெய்த மழையால் வெப்பம் குறைந்து, தரிசு நிலங்களில் புற்கள் முளைத்து ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்கு போதுமான நீர் ஆதாரங்கள், மேய்ச்சல் வசதி கிடைத்துள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கோடைமழை இந்த ஆண்டு பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டபடி குறித்த நேரத்தில் பெய்து வருவதால், பருவமழை சீசன் ஆடி மாதத்திலேயே பெய்யும் என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

நேற்று மாலை பெய்த கன மழையால், முதுகுளத்தூர் பஸ் நிலையம் உள்பட முக்கிய பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லும் மாணவர்கள் அவதிபட்டனர்.

தொடர்ந்து மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் விளக்குகளை எரியவிட்டுச் சென்றனர்.

Tags:    

Similar News