செய்திகள்

உத்தமபாளையம் அருகே பெண் தர மறுத்ததால் விவசாயியை தாக்கிய தந்தை-மகன் கைது

Published On 2018-06-19 11:05 GMT   |   Update On 2018-06-19 11:05 GMT
உத்தமபாளையம் அருகே பெண் தர மறுத்ததால் விவசாயியை தாக்கிய தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.

தேனி:

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகில் உள்ள கோகிலாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது47). இவரது மகன் சேவுகபாண்டியன் (23). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த கர்ணன் மகளை பெண் கேட்டு சென்றனர். ஆனால் அவர் தனது மகளை தர முடியாது என்று கூறினார்.

இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. மாரியப்பன் மற்றும் அவரது மகன், உறவினர் ராஜகுரு ஆகிய 3 பேரும் சேர்ந்து கர்ணன் மற்றும் அவரது உறவினர்களை கடுமையாக தாக்கினர்.

இதில் கர்ணன், போஸ் (57), முத்துமுருகன் (52) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இது குறித்து போஸ் மகன் செல்வக்குமார் உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியப்பன் மற்றும் அவரது மகனை கைது செய்தனர். ராஜகுருவை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News