செய்திகள்
குற்றாலத்தில் மரத்தில் கார் மோதி டிரைவர் பலி
குற்றாலத்தில் மரத்தில் கார் மோதிய விபத்தில் டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
தென்காசி:
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையை சேர்ந்தவர் பிரபு. இவர் தனது குடும்பத்துடன் குற்றாலத்திற்கு குளிப்பதற்காக தனது காரில் சென்றார். காரை புதுக்கோட்டையை சேர்ந்த சக்திவேல் (வயது 30) என்பவர் ஓட்டி சென்றார்.
இந்நிலையில் இன்று காலை 4 மணிக்கு கார் பழைய குற்றாலம் தனியார் விடுதி அருகே வந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் அங்கிருந்த மரத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த டிரைவர் சக்திவேல் சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் இருந்த பிரபு, ஒரு பெண் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த குற்றாலம் இன்ஸ் பெக்டர் சுரேஷ், சப்- இன்ஸ்பெக்டர் மாதவன் ஆகியோர் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக் காக அனுப்பி வைத்தனர். மேலும் பலியான சக்திவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.