செய்திகள்

தக்கலை அருகே மரம் விழுந்து தொழிலாளி பலி

Published On 2018-06-18 13:06 GMT   |   Update On 2018-06-18 13:06 GMT
தக்கலை அருகே தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது ரப்பர் மரம் முறிந்து விழுந்ததில் தொழிலாளி பலியானார்.

தக்கலை:

நாகர்கோவில் சுங்கான் கடை பகுதியைச் சேர்ந்தவர் துரைமணி. இவரது மகன் ராஜன்(வயது32). தொழிலாளி. திருமணம் ஆகவில்லை. இவர் கடந்த 14-ந்தேதி தக்கலை அருகே உள்ள சித்திரன்கோடு பகுதியில் ஒரு தோட்டத்தில் வேலைக்கு சென்றிருந்தார். அங்கு சுமார் 500 அடி பள்ளத்தில் இறங்கி வேலை பார்த்து கொண்டிருந்தார்.

அப்போது மேலே இருந்து ரப்பர் மரம் ஒன்று முறிந்து ராஜன் மீது விழுந்தது. இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி ராஜன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தக்கலை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் தொலையா வட்டம் பகுதியைச் சேர்ந்த தோட்ட உரிமையாளர் ஜெய் மனோகரன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News