செய்திகள்

உத்தமபாளையம் அருகே பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி

Published On 2018-06-18 11:18 GMT   |   Update On 2018-06-18 11:18 GMT
உத்தமபாளையம் அருகே பைக் மீது லாரி மோதியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தேனி:

உத்தமபாளையம் அருகே உள்ள உ.அம்மாபட்டி அக்கம்மாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் பூமிநாதன்.

சம்பவத்தன்று இவர் கோவிந்தன்பட்டி வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரி மோதியதில் பூமிநாதன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது குறித்து உத்தமபாளையம் போலீசார் விசாரணை நடத்தி லாரி டிரைவர் முருகானந்தம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். #tamilnews

Tags:    

Similar News