செய்திகள்

கோவை அருகே காதலிப்பதாக கூறி பிளஸ்-1 மாணவிக்கு தொல்லை: கல்லூரி மாணவர் கைது

Published On 2018-06-17 13:33 GMT   |   Update On 2018-06-17 13:33 GMT
காதலிப்பதாக கூறி பிளஸ்-1 மாணவிக்கு தொல்லை கொடுத்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

கோவை:

கோவையை அடுத்த கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 18). பொள்ளாச்சியில் அரசு கலை கல்லூரியில் பி.பி.ஏ. இரண்டாமாண்டு படித்து வருகிறார்.

இவர் அதேபகுதியை சேர்ந்த பிளஸ்-1 மாணவி ஒருவரை காதலிப்பதாக கூறி தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு அப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவல் அறிந்ததும் கிணத்துக்கடவு சப்-இன்ஸ்பெக்டர் ஞானமுத்து மற்றும் போலீசார்சார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

இது குறித்து மாணவி கொடுத்த புகாரின்பேரில் முத்துக்குமார் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 3 பிரிவுகளில் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News