செய்திகள்

நாமக்கல்லில் தனியார் கார் நிறுவன ஊழியர் விபத்தில் பலி

Published On 2018-06-15 16:46 GMT   |   Update On 2018-06-15 16:46 GMT
நாமக்கல்லில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தனியார் கார் நிறுவன ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நாமக்கல்:

நாமக்கல் அருகே உள்ள வசந்தபுரம், வேப்பனம்புதூர் பகுதியை சேர்ந்தவர் சுபாஷ்குமார் (வயது 34). இவர் சேலம்- நாமக்கல் ரோட்டில் உள்ள தனியார் கார் விற்பனை நிலையத்தில் அலுவலராக பணியாற்றி வந்தார். வழக்கம்போல் நேற்று இரவு பணியை முடித்துக் கொண்டு சுபாஷ்குமார் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.  அவர் திருச்சி சாலையில் ஆண்டவர் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது எதிரே ஒருவர்  மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக வந்தார்.

அப்போது இரண்டு மோட்டார் சைக்கிள்களும் திடீரென நேருக்குநேர் பயங்கரமாக மோதியது. இதில் சுபாஷ்குமார் தலை, முகத்தில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபதாக உயிரிழந்தார். 

விபத்து நடந்த தகவல் அறிந்ததும் நாமக்கல் டவுன் போலீசார் விரைந்து வந்து சுபாஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு தலைமை பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவருக்கு திருமணம் ஆகி அருள்மொழி என்ற மனைவியும், 5 வயதில் ரமணஸ்ரீ என்ற பெண் குழந்தையும், 3 வயதில் விக்னேஷ்குமார் என்ற மகனும் உள்ளனர். 
விபத்தில் கணவர் இறந்த தகவலை அறிந்ததும் அருள்மொழி மருத்துவமனைக்கு வந்து கதறி அழுதார். இந்த சம்பவத்தினால் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
Tags:    

Similar News