செய்திகள்
மெஞ்ஞானபுரம் அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல்
மெஞ்ஞானபுரம் அருகே முன்விரோத தகராறில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர்:
மெஞ்ஞானபுரம் அருகே உள்ள சோலைகுடியிருப்பு ஜெபநானபுரம் பகுதியை சேர்ந்த கனகராஜ் மனைவி செல்வி வயது(48). கூலித்தொழிலாளியான இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த சாலமோன் மனைவி பியூலாவுக்கும் பாதை தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது.
இந்த நிலையில் சம்பவத் தன்று மாலை அந்த வழியாக புல் கட்டுடன் வந்த செல்வியிடம், இந்த பாதைவழியாக எப்படி வருவாய் என கேட்டு பியூலா அவதூறாக பேசியுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் பியூலா செல்வியை கையில் கடித்தும், கழுத்தை நெறித்தும், அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதில் காயமடைந்த செல்வி திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோல் செல்வி தன்னை தாக்கியதாக பியூலாவும் புகார் கொடுத்துள்ளார். இருதரப்பு புகாரின் பேரில் திருச்செந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.