செய்திகள்

பராமரிப்பு பணி காரணமாக ரெயில் சேவையில் மாற்றம்

Published On 2018-06-14 02:54 GMT   |   Update On 2018-06-14 02:54 GMT
சென்னை-கூடூர் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று (வியாழக்கிழமை) ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை:

சென்னை-கூடூர் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று (வியாழக்கிழமை) மூர்மார்க்கெட்-ஆவடி மதியம் 2.05 மணி, ஆவடி-மூர்மார்க்கெட் மதியம் 2.50 மணி மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. நெல்லூர்-சூலூர்பேட்டை காலை 10 மணி, சூலூர்பேட்டை-நெல்லூர் மதியம் 12 மணி ரெயில்கள் 1½ மணி நேரம் தாமதமாக புறப்படும்.

விஜயவாடா-சென்னை சென்டிரல் பிற்பகல் 1 மணி பினாகினி எக்ஸ்பிரஸ் 1 மணி 20 நிமிடங்கள் தாமதமாகவும், இந்த ரெயில் மறுமார்க்கமாக சென்னையில் இருந்து புறப்படும்போது 1 மணி நேரம் தாமதமாகவும் செல்லும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

Tags:    

Similar News