செய்திகள்

போடி அருகே சாப்பிட்டதற்கு பணம் கேட்டதால் தகராறு - ஓட்டல் ஊழியரை தாக்கிய கும்பல்

Published On 2018-06-13 11:27 GMT   |   Update On 2018-06-13 11:27 GMT
போடி அருகே சாப்பிட்டதற்கு பணம் கேட்டதால் ஓட்டல் ஊழியர் தாக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலசொக்கநாதபுரம்:

போடியை சேர்ந்தவர் முகமது இஸ்மாயில் (வயது21). பஸ் நிலையம் அருகே உள்ள ஓட்டலில் கேஷியராக வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று இந்த ஓட்டலுக்கு அதே பகுதியை சேர்ந்த பிரதீப், கார்த்திக் மற்றும் மாயவேல் ஆகியோர் உணவு சாப்பிட வந்தனர். சாப்பிட்டு விட்டு அவர்களிடம் உணவுக்கான தொகையை ஊழியர்கள் கேட்டனர். ஆனால் 3 பேரும் பணம் தராமல் தகராறில் ஈடுபட்டனர்.

முகமது இஸ்மாயில் அவர்களிடம் பணத்தை கொடுத்து விட்டு செல்லுமாறு கூறி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் அவரை தாக்கினர். இது குறித்து போடி டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயவேலை கைது செய்தனர். தப்பி ஓடிய பிரதீப் மற்றும் கார்த்திக்கை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News